என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே தந்தை-மகனை தாக்கிய 2 பேர் கைது
தேனி:
ஆண்டிப்பட்டி அருகில் உள்ள க.விலக்கு போலீஸ் சரகத்துக்குட்பட்ட குன்னூர் மேலத்தெருவை சேர்ந்தவர் குமார்(வயது52). இவர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த வேறு சமுதாய குழந்தைகளுக்கு திண்பண்டங்கள் வாங்கி கொடுத்தார்.
இதனை கிழக்கு தெருவை சேர்ந்த கலைவாணன் (15) என்பவன் கண்டித்தான். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த கலைவாணன், அவரது அண்ணன் பாண்டியராஜன் (20), தந்தை நீதிராஜன் (48) மற்றும் அருண்குமார் (20), அலெக்ஸ்பாண்டி (17) ஆகிய 5 பேரும் குமார் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது இதை தட்டிகேட்ட குமாரின் மகன் தினேஷ்பாண்டி (22) என்பவரை கட்டையால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். குமாருக்கும் காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த தினேஷ்பாண்டி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து குமார், க.விலக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிராஜன் மற்றும் அருண்குமாரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்