search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் கணவனை எரித்து கொன்ற மனைவி கைது
    X

    தஞ்சையில் கணவனை எரித்து கொன்ற மனைவி கைது

    தஞ்சை அருகே கணவர் மீது மண்எண்ணெய் ஊற்றி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஞானம் நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 39). தையல் மெஷின் மெக்கானிக். இவரது மனைவி சரளா (33). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மகேஷ் பலத்த தீக்காயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மகேஷ் இறந்தார்.

    இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தகராறின் போது மகேஷ் மீது சரளா மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×