search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவையாறு பகுதியில் விபத்தில் மூதாட்டி உள்பட 3 பேர் காயம்
    X

    திருவையாறு பகுதியில் விபத்தில் மூதாட்டி உள்பட 3 பேர் காயம்

    திருவையாறு பகுதியில் விபத்தில் மூதாட்டி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு:

    திருவையாறு கல்யாணபுரம் லிங்கத்தடி பகுதி புது தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சுரேந்திரன் (வயது 38). இவர் நடுக்கடை பாலம் அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சுரேந்திரன் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருவையாறு அருகே கண்டியூர் செங்கமேடு கீழதெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பெரியய்யா(வயது 30). இவர் நேற்று மாலை கண்டியூர் புற்றுகுளக்கரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த மினி லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த இரண்டு சம்பவம் குறித்தும் திருவையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு அருகே உள்ள விளாங்குடி பகுதி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகமாயி(வயது 60). இவர் நேற்று இரவு அப்பகுதி சாலையில் நடந்து சென்றுள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இது குறித்து திருவையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×