என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொத்தவால்சாவடியில் குட்கா சப்ளை செய்த 4 வியாபாரிகள் கைது
Byமாலை மலர்24 July 2017 6:26 AM GMT (Updated: 24 July 2017 6:26 AM GMT)
கொத்தவால்சாவடியில் குட்கா சப்ளை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னையில் தடை செய்யப்பட்டுள்ள குட்கா விற்பனையை அடியோடு ஒழிக்க போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
வெளிமாநிலங்களில் இருந்து ரகசியமாக குட்காவை வரவழைத்து கொத்தவால்சாவடியில் இருந்து பல பகுதிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து குட்கா ஒழிப்பு படையினர் கொத்தவால்சாவடியில் ரகசிய கண் காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது குட்கா வியாபாரத்தில் ஈடுபட்ட அஞ்சுபாபு, பால்ராஜ், பவித்ரன், சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை கைப்பற்றினார்கள். இவர்களிடம் குட்கா வாங்கி விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் யார் யார்? என்ற விபரங்களை சேகரித்து அவர்களையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X