என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காயல்பட்டினத்தில் மனைவிக்கு கொலை மிரட்டல்: டிரைவர் கைது
Byமாலை மலர்22 July 2017 5:22 PM GMT (Updated: 22 July 2017 5:22 PM GMT)
காயல்பட்டினத்தில் மனைவியிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த டிரைவரை போலீசார் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் கோமான் புதூரை சேர்ந்தவர் மாதவராஜ். இவரது மகள் பபிதா (வயது 22). இவருக்கும் ஆறுமுகநேரி கீழ நவ்வலடிவிளையை சேர்ந்த ஆனந்தராஜ் (35) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
லோடு ஆட்டோ டிரைவரான ஆனந்தராஜ் அடிக்கடி குடி போதையில் வந்து மனைவி பபிதாவை அடித்து உதைப்பாராம். இதனால் வெறுத்துப்போன பபிதா தனது குழந்தையுடன் கடந்த ஒரு வருடமாக காயல்பட்டினத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அங்கு சென்ற ஆனந்தராஜ், பபிதாவிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்ததுடன் கொன்று புதைத்து விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். இது பற்றி பபிதா அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
காயல்பட்டினம் கோமான் புதூரை சேர்ந்தவர் மாதவராஜ். இவரது மகள் பபிதா (வயது 22). இவருக்கும் ஆறுமுகநேரி கீழ நவ்வலடிவிளையை சேர்ந்த ஆனந்தராஜ் (35) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
லோடு ஆட்டோ டிரைவரான ஆனந்தராஜ் அடிக்கடி குடி போதையில் வந்து மனைவி பபிதாவை அடித்து உதைப்பாராம். இதனால் வெறுத்துப்போன பபிதா தனது குழந்தையுடன் கடந்த ஒரு வருடமாக காயல்பட்டினத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அங்கு சென்ற ஆனந்தராஜ், பபிதாவிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்ததுடன் கொன்று புதைத்து விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். இது பற்றி பபிதா அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X