search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயல்பட்டினத்தில் மனைவிக்கு கொலை மிரட்டல்: டிரைவர் கைது
    X

    காயல்பட்டினத்தில் மனைவிக்கு கொலை மிரட்டல்: டிரைவர் கைது

    காயல்பட்டினத்தில் மனைவியிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த டிரைவரை போலீசார் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் கோமான் புதூரை சேர்ந்தவர் மாதவராஜ். இவரது மகள் பபிதா (வயது 22). இவருக்கும் ஆறுமுகநேரி கீழ நவ்வலடிவிளையை சேர்ந்த ஆனந்தராஜ் (35) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    லோடு ஆட்டோ டிரைவரான ஆனந்தராஜ் அடிக்கடி குடி போதையில் வந்து மனைவி பபிதாவை அடித்து உதைப்பாராம். இதனால் வெறுத்துப்போன பபிதா தனது குழந்தையுடன் கடந்த ஒரு வருடமாக காயல்பட்டினத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

     இந்த நிலையில் நேற்று மதியம் அங்கு சென்ற ஆனந்தராஜ், பபிதாவிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்ததுடன் கொன்று புதைத்து விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார். இது பற்றி பபிதா அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
    Next Story
    ×