என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வெள்ளகோவில் அருகே தனியார் மில்லில் தீ: பல லட்சம் சேதம்
முத்தூர்:
வெள்ள கோவில் அருகே கோவை மெயின் ரோட்டில் வெள்ளமடை என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு ஸ்பின்னிங் மில் உள்ளது. இந்த மில்லில் இன்று அதிகாலை 20 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.அப்போது மில்லில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்று உடனடியாக தெரியவில்லை. அப்போது காற்றும் அதிகமாக வீசியதால் தீ மள..மள..வென பிடித்தது.வேலை பார்த்த தொழிலாளர்கள் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர்.
தீ அணைக்க போதிய தண்ணீர் இல்லாததால் காங்கயம், வெள்ள கோவில் மற்றும் கொடுமுடியிலிருந்து 3 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்