search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உல்லாசமாக இருந்துவிட்டு காதலியை ஏமாற்றிய சென்னை போலீஸ்காரர்: திருமணத்துக்கு மறுப்பதாக புகார்
    X

    உல்லாசமாக இருந்துவிட்டு காதலியை ஏமாற்றிய சென்னை போலீஸ்காரர்: திருமணத்துக்கு மறுப்பதாக புகார்

    உல்லாசம் அனுபவித்து காதலியை ஏமாற்றிய சென்னை போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    செங்கம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 26 வயதுடைய இளம்பெண். இவரும், செங்கம் ஆலத்தூர் அந்தோணியபுரத்தை சேர்ந்த அலெக்ஸாண்டர் ஜோசப் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அலெக்ஸாண்டர், இளைஞர் காவல் படையில் இருந்து தற்போது, சென்னையில் போஸ்காரராக உள்ளார்.

    அடிக்கடி செங்கம் வந்து காதலியை சந்தித்த அலெக்ஸாண்டர், திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார். இந்த நிலையில், சில நாட்களாக அலெக்ஸாண்டரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. காதலி போன் செய்தாலும் அவர் எடுப்பதில்லை.

    அதன்பிறகே, உல்லாசம் அனுபவித்து போலீஸ்காரர் தன்னை ஏமாற்றியது காதலிக்கு தெரியவந்தது.

    இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் காதலி புகார் அளித்தார். போலீஸ்காரர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×