search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொருக்குப்பேட்டையில் 6 மாத பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது
    X

    கொருக்குப்பேட்டையில் 6 மாத பெண் குழந்தையை கொன்ற தந்தை கைது

    கொருக்குப்பேட்டையில் 6 மாத பெண் குழந்தையை கொன்ற தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    ராயபுரம்:

    சென்னை கொருக்குப்பேட்டை சண்முகராயன் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (33) ரெயில்வே ஊழியர். இவரது மனைவி கோமதி. இந்த தம்பதிக்கு ஹர்சீகாஸ்ரீ என்ற 6 மாத பெண்குழந்தை இருந்தது. கடந்த மார்ச் மாதம் குழந்தை திடீரென மயக்கம் போட்டு விழுந்தது. எந்த ரத்த காயமும் ஏற்படாத நிலையில் மயங்கி கிடந்த குழந்தையை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஹர்சிகாஸ்ரீ பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் அக்குழந்தையின் சாவில் திடீரென திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    குழந்தையின் உடலை பரிசோதித்த டாக்டர் உடல் நலம் சரியில்லாமல் குழந்தை இறக்கவில்லை என்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக உயிர் இழந்ததாக அறிக்கையில் தெரிவித்துள் ளார்.

    இதையடுத்து ராஜேசிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். குழந்தையை கொன்றதாக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×