search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூளையில் வியாபாரி வீட்டில் 120 கிலோ குட்கா - ரூ.50 லட்சம் பறிமுதல்
    X

    சூளையில் வியாபாரி வீட்டில் 120 கிலோ குட்கா - ரூ.50 லட்சம் பறிமுதல்

    சென்னை சூளையைச் சேர்ந்த வியாபாரி வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் குடோனில் இருந்த 120 கிலோ குட்காவையும் கைப்பற்றினார்கள்.
    சென்னை:

    தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அரசியலிலும் புயலை கிளப்பி வரும் நிலையில் குட்கா விற்பனையை அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சென்னை சூளையைச் சேர்ந்தவர் பிரஜேஷ்குமார் திவாரி. பிரபல குட்கா வியாபாரியான இவர் ரகசியமாக குட்கா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வேப்பேரி போலீசார் திவாரி வீடு மற்றும் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் குடோனில் இருந்த 120 கிலோ குட்காவையும் கைப்பற்றினார்கள்.

    போலீசார் வருவதை அறிந்ததும் குட்கா வியாபாரி திவாரி தப்பி ஓடி விட்டார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த பாலாஜி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதே போல் சைதாப்பேட்டை, அண்ணாநகர் உள்பட சென்னையின் பல இடங்களில் நடந்த சோதனையில் ஏராளமான குட்கா கைப்பற்றப்பட்டது.

    இது தொடர்பாக இதுவரை 610 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×