search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர்ந்து அதிகரிப்பு: தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு
    X

    தொடர்ந்து அதிகரிப்பு: தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.21,816-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 14-ந்தேதி ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 40 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.21 ஆயிரத்து 464-க்கு விற்கப்பட்டது.

    நேற்று ரூ.208 உயர்ந்து ரூ.21 ஆயிரத்து 672 ஆக இருந்தது. இன்று மேலும் பவுனுக்கு ரூ.144 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 816 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.18 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,727-க்கு விற்கிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 700 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.70 ஆகவும் உள்ளது.
    Next Story
    ×