search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பி.எஸ். அணியில் இருந்து எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி விலகியதில் யாருடைய நிர்பந்தமும் இல்லை: தம்பித்துரை
    X

    ஓ.பி.எஸ். அணியில் இருந்து எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி விலகியதில் யாருடைய நிர்பந்தமும் இல்லை: தம்பித்துரை

    ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்து எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி விலகியதில் யாருடைய நிர்பந்தமும் இல்லை என கோவை விமான நிலையத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.
    கோவை:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை எம்.பி. கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியையும், எம்.ஜி.ஆர். பெற்று தந்த இரட்டை இலை சின்னத்தையும் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றுசேர வேண்டும் என்பது அனைவரது விருப்பம். இந்த நோக்கத்துக்காக தான் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விலகியதை காட்டுகிறது.

    மேலும் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகியதில் யாருடைய நிர்பந்தமும் இல்லை.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில் இரட்டை இலையை மீட்கவும், ஆட்சியை காப்பாற்றவும் வேண்டியது அனைவரது கடமை.

    அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரத்தில் மாநில அரசின் அதிகாரத்துக்குட்பட்ட பிரச்சனையில் பாராளுமன்றம் முன்பு ஓ.பி.எஸ். அணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியது தேவையற்றது.

    அ.தி.மு.க.வில் பிளவு என்பதே கிடையாது. ஆர்.கே. நகர் தேர்தலையொட்டி தான் தேர்தல் கமி‌ஷன் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

    தமிழகம் தற்போது வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து சிலர் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். தமிழகம் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    நடிகர் கமல், ஊழல் புகார் குறித்து பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. ஊழல் புகார் என்பது நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். கருத்துக்கள் கூறலாம்.

    சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து கர்நாடக அரசு விசாரணை குழு அமைத்துள்ளது. விசாரணைக்கு பின்னரே உண்மை வெளிவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×