என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னையில் குட்கா-பான் மசாலா விற்ற 421 பேர் கைது
சென்னை:
சென்னையில் குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
இதையடுத்து சென்னை நகர் முழுவதும் தடை செய்யப்பட்ட மாவா, ஹான்ஸ் மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை கடந்த 2 நாட்களாக நடந்தது.
இதில் வடக்கு மண்டலத்தில் 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேரும், மேற்கு மண்டலத்தில் 286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 113 பேரும் மற்றும் கிழக்கு மண்டலத்தில் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 பேரும், தெற்கு மண்டலத்தில் 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 225 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னை மாநகரில் தீவிர சோதனைகள் மேற்கொண்டு 610 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 421 பேர் கைது செய்யப்பட்டு, 12,305 பான்மசாலா மற்றும் மாவா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட மாவா, ஹான்ஸ், பான் மசாலா பாக் கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள் தயாரிப்பவர்களையும் விற்பனை செய்பவர்களையும் தொடர்ந்து கண்காணித்து கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்