search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
    X

    திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது

    திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 21-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடை பெறவுள்ளது.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 21-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடை பெறவுள்ளது. இம்முகாமில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியடைந்தவர்கள், ஐ.டி.ஐ பிட்டர், டர்னர், மோட்டார் மெக்கானிக் உள்ளிட்ட அனைத்து பிரிவுகள், இலகு ரக வாகன ஓட்டு நர்கள், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு காலி பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வும், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவும் நடைபெற உள்ளது.

    இம்முகாம் மூலம் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படுவதால் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் வேலையளிப்போர் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நாளை 21-ந்தேதியன்று நேரில் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×