என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்19 July 2017 5:22 PM GMT (Updated: 19 July 2017 5:22 PM GMT)
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடலில் இறங்கி நின்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமேசுவரம்:
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடலில் இறங்கி நின்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், நாட்டுப்படகு மீனவர்கள் 3 கடல் மைலுக்கு அப்பால் சென்று மீன் பிடிக்க வேண்டும், விசைப்படகின் குதிரை திறன் 150–லிருந்து 250–ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் மீன்பிடிக்கப்பட்டு, கடல் வளம் முழுமையாக அழிக்கப்படும்.
இந்த சட்டத்திருத்தம் மீனவ கிராமங்களின் குடிசை தொழிலை அழிக்கும் நோக்கத்தில் உள்ளது. ஆகவே நாட்டுப்படகு மீனவர்களுக்கு எதிராக உள்ள தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தை அரசு ரத்து செய்வதோடு, அனைத்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். மேலும் பராம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட திருத்த நகலை கிழித்து கடலில் எறிந்தனர்.
இதில் மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் செந்தில்வேல், நிர்வாகிகள் கருணாமூர்த்தி, வடகொரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நேற்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கடலில் இறங்கி நின்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், நாட்டுப்படகு மீனவர்கள் 3 கடல் மைலுக்கு அப்பால் சென்று மீன் பிடிக்க வேண்டும், விசைப்படகின் குதிரை திறன் 150–லிருந்து 250–ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் மீன்பிடிக்கப்பட்டு, கடல் வளம் முழுமையாக அழிக்கப்படும்.
இந்த சட்டத்திருத்தம் மீனவ கிராமங்களின் குடிசை தொழிலை அழிக்கும் நோக்கத்தில் உள்ளது. ஆகவே நாட்டுப்படகு மீனவர்களுக்கு எதிராக உள்ள தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்கு முறை சட்டத்தை அரசு ரத்து செய்வதோடு, அனைத்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய சட்டத்தை இயற்ற வேண்டும். மேலும் பராம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட திருத்த நகலை கிழித்து கடலில் எறிந்தனர்.
இதில் மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் செந்தில்வேல், நிர்வாகிகள் கருணாமூர்த்தி, வடகொரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X