என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊழல் குற்றச்சாட்டு: கமலஹாசன் கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு
Byமாலை மலர்17 July 2017 8:02 AM GMT (Updated: 17 July 2017 8:02 AM GMT)
ஊழல் குற்றச்சாட்டு கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமலஹாசனுக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அணியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை:
கமலஹாசனுக்கு எடப்பாடி அணி எதிர்ப்பும், தி.மு.க. ஆதரவும் தெரிவித்த நிலையில் ஓ.பி.எஸ். அணி எந்த கருத்தையும் வெளியிடாமல் இருந்தது.
இந்த நிலையில் இன்று கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-
ஜனநாயக நாட்டில் எந்த ஒரு குடிமகனுக்கும் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் நடிகர் கமலஹாசன் விமர்சித்துள்ளார். அவரது விமர்சனத்தை ஆட்சியாளர்கள் கேட்டறிந்து உரிய பதில் சொல்ல வேண்டும். அதற்கு மாறாக அவர் மீது கோபப்படுவது இயற்கைக்கு மாறானது. அரசியல் கோட்பாடுகளுக்கு மாறானது.
ஒருவர் குறை சொல்லும் போது அதற்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவோ, பழிக்கவோ கூடாது. கமலை குறை சொன்னால் அவர்களது மரியாதைதான் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஜனநாயகத்தில் ஒரு ஆட்சியை பற்றி கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் கமலஹாசன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்காக அவரை எதிர்ப்பது சரியல்ல.
ஆளும் கட்சியினர் இந்த ஆட்சியை வழி நடத்துவதில் மெத்தன போக்கோடு நடந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கமலஹாசனுக்கு எடப்பாடி அணி எதிர்ப்பும், தி.மு.க. ஆதரவும் தெரிவித்த நிலையில் ஓ.பி.எஸ். அணி எந்த கருத்தையும் வெளியிடாமல் இருந்தது.
இந்த நிலையில் இன்று கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-
ஜனநாயக நாட்டில் எந்த ஒரு குடிமகனுக்கும் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் நடிகர் கமலஹாசன் விமர்சித்துள்ளார். அவரது விமர்சனத்தை ஆட்சியாளர்கள் கேட்டறிந்து உரிய பதில் சொல்ல வேண்டும். அதற்கு மாறாக அவர் மீது கோபப்படுவது இயற்கைக்கு மாறானது. அரசியல் கோட்பாடுகளுக்கு மாறானது.
ஒருவர் குறை சொல்லும் போது அதற்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவோ, பழிக்கவோ கூடாது. கமலை குறை சொன்னால் அவர்களது மரியாதைதான் குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஜனநாயகத்தில் ஒரு ஆட்சியை பற்றி கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் கமலஹாசன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்காக அவரை எதிர்ப்பது சரியல்ல.
ஆளும் கட்சியினர் இந்த ஆட்சியை வழி நடத்துவதில் மெத்தன போக்கோடு நடந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X