search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணமங்கலம் அருகே குடிநீர் கேட்டு மறியல்
    X

    கண்ணமங்கலம் அருகே குடிநீர் கேட்டு மறியல்

    கண்ணமங்கலம் அருகே குடிநீர் கேட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் காரணமாக சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் ஊராட்சியில், அம்பேத்கர் காலனி பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக குடிநீர் சப்ளை கிடைக்கப் பெறவில்லை.

    ஊராட்சி நிர்வாகத்தினர் பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைக்காததால் அதனை கண்டித்து இன்று காலை அப்பகுதி பெண்கள், ஆண்கள் உள்பட சுமார் 100 பேர் கண்ணமங்கலம் படவேடு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சமரசம் செய்தனர்.அப்போது பழுதடைந்த மின் மோட்டாரை உடனடியாக சரிசெய்து குடிநீர் சப்ளை வழங்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×