search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக விவசாயிகள் டெல்லி பயணம் - மீண்டும் போராட்டத்தை தொடங்கப்போவதாக அறிவிப்பு
    X

    தமிழக விவசாயிகள் டெல்லி பயணம் - மீண்டும் போராட்டத்தை தொடங்கப்போவதாக அறிவிப்பு

    தமிழக விவசாயிகள் ரெயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். மீண்டும் போராட்டத்தை தொடங்க உள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
    சென்னை:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நேற்று மதியம் திருச்சியில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை எழும்பூர் வந்தனர். பின்னர் அவர்கள் சென்டிரலில் இருந்து கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    முன்னதாக எழும்பூர் ரெயில் நிலையத்தில், அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

    இது சம்பந்தமாக பிரமரை சந்தித்து முறையிட எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தினோம்.

    அப்போது தமிழக முதல்-அமைச்சர் எங்களை நேரில் சந்தித்து விவசாயிகளின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்று தருவதாக உறுதி அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தமிழக விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு விவசாயிக்கும் தனிநபர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் 50-க்கும் மேற்பட்டோர் தற்போது டெல்லிக்கு சென்று ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×