search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் பள்ளியில் மோதல்: பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து
    X

    தனியார் பள்ளியில் மோதல்: பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து

    ராயபுரம் அருகே தனியார் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பிளஸ்-2 மாணவருக்கு மீது கத்திக்குத்து விழுந்தது.
    ராயபுரம்:

    ராயபுரம் சூரியநாராயண தெருவில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவருக்கும், பிளஸ்-2 படிக்கும் மாணவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

    நேற்று மாலை இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது பிளஸ்-1 மாணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சக மாணவரின் தொடையில் குத்தினார்.

    காயம் அடைந்த அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ராயபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காயம் அடைந்த மாணவனின் தந்தை வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
    Next Story
    ×