search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
    X

    ஊட்டி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

    மின்வேலியை மிதித்ததால் விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்,
    ஊட்டி:

    ஊட்டி அருகே எமரால்டு பகுதியில் மலை காய்கறி பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. வனவிலங்குகள் சில சமயங்களில் தோட்டங்களில் புகுந்து காய்கறிகளை சேதம் செய்து விடுகின்றன. இதனால் ஒரு சில விவசாயிகள் தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த விவசாயி முருகன் (வயது 40) என்பவர் தனது தோட்டத்துக்கு சென்றார்.

    அப்போது செல்லும் வழியில் ஒரு தோட்டத்தில் இருந்த மின்வேலியை கவனிக்காமல் காலால் மிதித்து விட்டார். உடனே மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் எமரால்டு போலீசார் விரைந்து சென்று முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தோட்டத்தில் மின்வேலி அமைத்த விவசாயி குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×