search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா துணை ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்: பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    பா.ஜனதா துணை ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்: பொன்.ராதாகிருஷ்ணன்

    பாரதிய ஜனதா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என மார்த்தாண்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    குழித்துறை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதாவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு தற்போது செயல்பட தொடங்கி உள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சிறு சிறு மாற்றங்கள் வரும். ஜி.எஸ்.டி. வரியால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே வரி வந்துள்ளது.


    பாரதிய ஜனதா வளர்ந்து வருவதை பார்த்து மு.க.ஸ்டாலின் அஞ்சுகிறார். தி.மு.க.வை விட பாரதிய ஜனதா வளர்ச்சி அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×