search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் தாய்-மகள் உட்பட 3 பேர் மாயம்
    X

    திருச்சியில் தாய்-மகள் உட்பட 3 பேர் மாயம்

    திருச்சியில் தாய்-மகள் உட்பட 3 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே காந்திபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி அருணா (வயது 25). இந்த தம்பதிக்கு தீபிகா (3) என்ற மகள் உள்ளார்.

    திருச்சி திருவானைக் காவல் கீழக்கொண்டையம் பேட்டையில் உள்ள அவர்களது உறவினர் வீட்டு விசேசத்திற்காக கணவன்-மனைவி மற்றும் குழந்தை ஆகிய 3 பேரும் குடும்பத்துடன் வந்துள்ளனர். அருணா ஏற்கனவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் உறவினர் வீட்டு விசேசத்திற்கு வந்த அவர் தனது மகளுடன் உறையூர் சி.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாக கூறி சென்றார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அருணா மற்றும் அவரது மகள் தீபிகா உறவினர் வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரவிக்குமார் மனைவி மகளை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் தாய்-மகள் இருவரும் கிடைக்கவில்லை.

    உடுமலைப் பேட்டையில் உள்ள அவரது உறவினர்களிடம் போனில் விசாரித்தார் ஆனால் அங்கும் அருணா வரவில்லை என கூறினர். இது குறித்து அவரது கணவர் உறையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் உறையூர் எழில் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு விக்டோரியா என்ற மனைவி உள்ளார்.

    இந்நிலையில் செல்வராஜ் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் 3 வருடங்களாக தனது கணவர் எப்போதாவது வந்து விடுவாரா? என்ற ஏக்கத்தில் வாழ்ந்து வந்தார். தற்போது வரை கணவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் இது குறித்து உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் கடந்த 3 வருடங்களாக எங்கு சென்றார்? விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×