search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பை அருகே காதலியை கற்பழித்து திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் மீது வழக்கு
    X

    அம்பை அருகே காதலியை கற்பழித்து திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் மீது வழக்கு

    அம்பை அருகே 2 ஆண்டுடாக காதலித்து வந்த காதலியை கற்பழித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    அம்பை அருகே உள்ள வேம்பையாபுரத்தை சேர்ந்த இளம்பெண் சாந்தி (வயது 17) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவரும் அதே பகுதியை சேர்ந்த பரமசிவன் என்பவரும் கடந்த 2 ஆண்டாக காதலித்து வந்தனர்.

    கடந்த 6 மாதத்துக்கு முன்பு சாந்தியை பரமசிவன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்து விட்டாராம். பின்னர் அவர் சாந்திய திருமணம் செய்ய மறுத்தார்.

    இதுபற்றி சாந்தி தரப்பில் அம்பை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×