என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வத்தலக்குண்டு பகுதியில் தக்காளி- வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் தக்காளி மற்றும் வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. பழைய வத்தலக்குண்டு, செக்காபட்டி, கண்ணாபட்டி, விராலிப்பட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் வெங்காயம் மற்றும் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாகவே மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் கருகதொடங்கியது. எனவே வத்தலக்குண்டு மார்க்கெட்டிற்கு தக்காளி, வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.
இதன்காரணமாக விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சமையலுக்கு ருசியை கூட்டுவதில் சின்னவெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. நேற்றுவரை கிலோ ரூ.110-க்கு விற்ற வெங்காயம் தற்போது ரூ.130ஆக விலை உயர்ந்துள்ளது.
நாட்டுத்தக்காளி வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டது. பெங்களூரில் இருந்து வரும் போண்டா தக்காளி வரத்தும் குறைவாக உள்ளதால் ஒரு கிலோ ரூ.70வரை விற்பனையாகிறது. வெங்காயத்தை உறித்தால்தான் கண்ணீர் வரும். தற்போது அதன்விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது. எனவே இல்லத்தரசிகள் செய்வதறியாது உள்ளனர்.
பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாகிறது. ஆனால் இதை பிரியாணி மற்றும் ஆம்லெட்களில் மட்டுமே உபயோகிக்கமுடியும் என்பதால் சின்னவெங்காயத்தையே அதிக விலை கொடுத்து வாங்கிச்செல்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்