என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் அருகே வேன் மீது அரசு பஸ் மோதல்: 10 பயணிகள் படுகாயம்
Byமாலை மலர்29 Jun 2017 11:16 AM GMT (Updated: 29 Jun 2017 11:16 AM GMT)
விருதுநகர் அருகே வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 10 பயணிகள் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
மதுரையில் இருந்து இன்று காலை ஒரு வேன் விருதுநகருக்கு புறப்பட்டது. காலை 10 மணி அளவில் விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி காவிரி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
திடீரென டயர் வெடித்து வேன் நிலைதடுமாறி ஓடி ரோட்டின் மறுபுறத்துகு சென்றது. அப்போது நெல்லையில் இருந்து மதுரை வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. மேலும் பின்னால் வந்த மற்றொரு அரசு பஸ்சும் வேன் மீது அடுத்தடுத்து மோதியது.
விபத்து நடந்தபோது அரசு பஸ்களில் இருந்த பயணிகள் கூக்குரலிட்டனர். உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ்சில் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த பாண்டியன் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரையில் இருந்து இன்று காலை ஒரு வேன் விருதுநகருக்கு புறப்பட்டது. காலை 10 மணி அளவில் விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி காவிரி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
திடீரென டயர் வெடித்து வேன் நிலைதடுமாறி ஓடி ரோட்டின் மறுபுறத்துகு சென்றது. அப்போது நெல்லையில் இருந்து மதுரை வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. மேலும் பின்னால் வந்த மற்றொரு அரசு பஸ்சும் வேன் மீது அடுத்தடுத்து மோதியது.
விபத்து நடந்தபோது அரசு பஸ்களில் இருந்த பயணிகள் கூக்குரலிட்டனர். உடனே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ்சில் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர்.
இந்த விபத்தில் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த பாண்டியன் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X