என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பண்ருட்டி அருகே லாரி கவிழ்ந்தது: 5 பேர் படுகாயம்
பண்ருட்டி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து முந்திரி கட்டைகள் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பண்ருட்டிக்கு வந்து கொண்டிருந்தது. லாரியை விருத்தாசலம் அருகே உள்ள பூண்டியார் குப்பத்தைச் சேர்ந்த ராஜசந்திரன் (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக சஞ்சய்காந்தி (28) என்பவர் இருந்தார்.
இன்று அதிகாலை அந்த லாரி பண்ருட்டி அருகே அங்குசெட்டிப்பாளையம் என்ற இடத்தில் வந்தது. அப்போது காய்கறி லோடு ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று எதிரே வந்தது.
அப்போது திடீரென்று மினி லாரி மீது முந்திரி கட்டை ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் முந்திரிகட்டை ஏற்றி வந்த லாரி நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் ராஜசந்திரன், கிளீனர் சஞ்சய்காந்தி, மினி லாரி டிரைவரான விழுப்புரம் மாவட்டம் வேப்பம்பாளையத்தைச் சேர்ந்த கொளஞ்சி (40) மற்றும் மினி லாரியில் வந்த அருள்அரசன், தனபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 5 பேரும் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தால் கடலூர்- சித்தூர் சாலையில் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்