search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட்தேர்வில் மதிப்பெண் குறைவு: பெற்றோர் கண்டித்ததால் மாணவி மாயம்
    X

    நீட்தேர்வில் மதிப்பெண் குறைவு: பெற்றோர் கண்டித்ததால் மாணவி மாயம்

    நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததை பெற்றோர் கண்டித்ததால் மாணவி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    விருதுநகர்:

    காரியாபட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் ராஜஸ்ரீ (வயது 17) பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற இவர், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை எழுதினார்.

    இதில் ராஜஸ்ரீக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர் கண்டித்ததால் அவர் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்து கம்ப்யூட்டர் சென்டர் சென்று வருவதாக கூறிச்சென்ற ராஜஸ்ரீ, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றி தகவல் கிடைக்காததால், காரியாபட்டி போலீசில் குணசேகரன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவி செய்து மாயமான ராஜஸ்ரீயை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×