என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே 55 கிலோ கஞ்சாவை பதுக்கிய 3 பேர் கைது
Byமாலை மலர்27 Jun 2017 5:29 PM GMT (Updated: 27 Jun 2017 5:29 PM GMT)
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்காட்டிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 55 கிலோ கஞ்சா மூட்டையை பறிமுதல் செய்து 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
கோடியக்காடு ஆதிவாசி காலனியைச் சேர்ந்த வரதராஜன் (வயது32), சாமிநாதன் (55) வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜகிளி (36) மற்றும் மற்றொரு வாலிபர். இவர்கள் 4 பேரும் நேற்று கோடியக்காட்டில் இருந்து சுமார் 55 கிலோ கஞ்சாவை படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துச்சென்றனர்.
இது குறித்து வேதாரண்யம் டி.எஸ்.பி. பாலுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோடியக்காடு வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயினுலாதீன் என்பவருக்கு சொந்தமான புகையிலை கொல்லையில் கஞ்சா மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே அங்கு சென்று போலீசார் கஞ்சா வைத்திருந்த மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வரதராஜன், ராஜகிளி, சாமிநாதன் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையிலிருந்து கஞ்சாவை ஏற்றி செல்ல வந்த படகு எங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த படகில் தங்கம் வந்ததா என்றும் போலீசாரும், உளவுத்துறை பிரிவினரும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோடியக்கரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோடியக்காடு ஆதிவாசி காலனியைச் சேர்ந்த வரதராஜன் (வயது32), சாமிநாதன் (55) வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜகிளி (36) மற்றும் மற்றொரு வாலிபர். இவர்கள் 4 பேரும் நேற்று கோடியக்காட்டில் இருந்து சுமார் 55 கிலோ கஞ்சாவை படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துச்சென்றனர்.
இது குறித்து வேதாரண்யம் டி.எஸ்.பி. பாலுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோடியக்காடு வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயினுலாதீன் என்பவருக்கு சொந்தமான புகையிலை கொல்லையில் கஞ்சா மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே அங்கு சென்று போலீசார் கஞ்சா வைத்திருந்த மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வரதராஜன், ராஜகிளி, சாமிநாதன் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையிலிருந்து கஞ்சாவை ஏற்றி செல்ல வந்த படகு எங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த படகில் தங்கம் வந்ததா என்றும் போலீசாரும், உளவுத்துறை பிரிவினரும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோடியக்கரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X