search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை
    X

    குன்னம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

    குன்னம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அசூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி விஜயா. இவர்களது மகன் வேல்முருகன் (வயது 20).

    இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு படித்து முடித்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்தார். இங்கிருந்து வேலை தேடி வந்தார்.

    ஆனால் வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையே விஜயாவும், சின்னசாமியும் ஏன் வேலைக்கு செல்லவில்லை என வேல்முருகனை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த வேல்முருகன் கடந்த 19-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வேல் முருகன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். வேல்முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    சின்னசாமிக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இதில் 2-வது மகன் வேல்முருகன் தான் தற்போது தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×