என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு இறுதி சடங்கு செய்த பொதுமக்கள்
Byமாலை மலர்25 Jun 2017 5:19 PM GMT (Updated: 25 Jun 2017 5:19 PM GMT)
காரிமங்கலத்தில் தெருவிளக்கு கம்பங்களில் குரங்குகள் தாவி குதித்து விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது ஒரு குட்டி குரங்கு மீது மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக இறந்தது.
காரிமங்கலம்:
காரிமங்கலம் போலீஸ் நிலையம் பின்புறம் அண்ணா நகர் உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று காலை இந்த பகுதியில் உள்ள தெருவிளக்கு கம்பங்களில் குரங்குகள் தாவி குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.
அப்போது ஒரு குட்டி குரங்கு எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அந்த குரங்கு குட்டியை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பொதுமக்கள் இறந்த குரங்கு குட்டிக்கு இறுதி சடங்கு செய்து வண்ணான் ஏரிக்கு எடுத்து சென்று புதைத்தனர். குட்டியை இழந்த தாய் குரங்கு நெடுநேரம் அந்த பகுதியிலேயே சுற்றி வந்தது. இந்த சம்பவம் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
காரிமங்கலம் போலீஸ் நிலையம் பின்புறம் அண்ணா நகர் உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று காலை இந்த பகுதியில் உள்ள தெருவிளக்கு கம்பங்களில் குரங்குகள் தாவி குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.
அப்போது ஒரு குட்டி குரங்கு எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அந்த குரங்கு குட்டியை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பொதுமக்கள் இறந்த குரங்கு குட்டிக்கு இறுதி சடங்கு செய்து வண்ணான் ஏரிக்கு எடுத்து சென்று புதைத்தனர். குட்டியை இழந்த தாய் குரங்கு நெடுநேரம் அந்த பகுதியிலேயே சுற்றி வந்தது. இந்த சம்பவம் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X