search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஞ்சுகிராமத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி
    X

    அஞ்சுகிராமத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி

    ரோட்டில் நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் அருகே வாரியூர் ஸ்ரீலெட்சுமிபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் சக்திவேல்குமார் (வயது 23).

    இவர், தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அஞ்சுகிராமம் டாஸ்மாக்கடை அருகே வந்தபோது ரோட்டின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது. அதன் மீது மோதாமல் இருக்க சக்திவேல் குமார் பிரேக் போட்டார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சக்திவேல் குமார் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக் காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சக்திவேல் குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து அஞ்சு கிராமம் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான சக்திவேல்குமாரின் உடல் பரிசோதனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.

    இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் திரண்டிருந்தனர்.

    Next Story
    ×