search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திடீர்நகரில் காதல் திருமணம் செய்த எலக்ட்ரீசியன் தற்கொலை
    X

    திடீர்நகரில் காதல் திருமணம் செய்த எலக்ட்ரீசியன் தற்கொலை

    காதல் திருமணம் செய்த எலக்ட்ரீசியன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை திடீர்நகர் ஆனந்த விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமர். இவரது மகன் ஈசுவரன் (வயது 26). எலக்ட்ரீசியன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்செல்வி என்பவரை குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தார்.

    இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால், கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    நேற்றும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ஈசுவரன் வீட்டுக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இதுகுறித்து திடீர்நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×