என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வலங்கைமான் அருகே வீடு இடிந்து விழுந்து விவசாயி நசுங்கி பலி: மனைவி படுகாயம்
வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவுக்குட்பட்ட நார்த்தாங்குடி ஊராட்சி மாரியம்மன்கோவில்தெரு ஆபத்சகாயேஸ்வரரின் மகன் சொக்கலிங்கம். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
இவர் நேற்று மாலை 6 மணியளவில் வயலுக்கு சென்றுவிட்டு வந்து வீட்டு வளாகத்தில் உள்ள சோபாவில் அமர்ந்து இருந்தார். அப்போது வீட்டின் மாடி மேற்கூரை முழுவதுமாக இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி அமிர்தவள்ளியின் கால்கள் மேற்கூரைக்கு அடியில் சிக்கி கொண்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கது வீட்டில் வசிப்பவர்கள் வலங்கைமான், நீடாமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் இடிபாடுகளில் சிக்கி கிடந்த சொக்கலிங்கம் உடலை மீட்டனர்.
இதுபற்றி அறிந்து வலங்கைமான் தாசில்தார் இன்னாசிராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் சம்பவ இடம் சென்று அமிர்தவள்ளியை மீட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். மேலும் சொக்கலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் வலங்கைமான் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்