search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தந்தை இறந்த வேதனையில் தீக்குளித்து பெண் தற்கொலை
    X

    தந்தை இறந்த வேதனையில் தீக்குளித்து பெண் தற்கொலை

    தந்தை இறந்த வேதனையில் உடலில் மண்எண்ணை ஊற்றி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அகத்தியர் வீதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் இவரது மனைவி ஜான்சா (வயது 40).

    ஜான்சாவின் தந்தை லத்தீப் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் ஜான்சா மிகவும் வேதனையுடன் இருந்தாராம்.

    இந்த நிலையில் ஜான்சா வீட்டில் இருந்த மண் எண்ணையை தன் உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் வலியால் துடித்த அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து அவரது மகன் சாகுல்ஹமீது கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ் பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×