என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்போன் பேசியபடி வாகனத்தில் சென்றால் ‘லைசென்ஸ்’ ரத்து
Byமாலை மலர்23 Jun 2017 8:33 AM GMT (Updated: 23 Jun 2017 8:33 AM GMT)
செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் லைசென்சை ரத்து செய்து 6 மாதங்களுக்கு அதனை முடக்கி வைப்பது என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மீறுவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் 17 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 50 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகமாகும்.
இதே போல இந்தியா முழுவதுமே விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக அரசு போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிகவேகத்தில் வாகனத்தில் செல்பவர்கள், போக்குவரத்து சிக்னலை மதிக்காதவர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் லைசென்சை ரத்து செய்து 6 மாதங்களுக்கு அதனை முடக்கி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில்தான் லைசென்ஸ் ரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மீறுவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் 17 ஆயிரம் சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 50 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகமாகும்.
இதே போல இந்தியா முழுவதுமே விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இதனை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழக அரசு போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், அதிகவேகத்தில் வாகனத்தில் செல்பவர்கள், போக்குவரத்து சிக்னலை மதிக்காதவர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் லைசென்சை ரத்து செய்து 6 மாதங்களுக்கு அதனை முடக்கி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில்தான் லைசென்ஸ் ரத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X