என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலாஜா ஏரியில் பிணம் மீட்பு: தனியார் நிறுவன ஊழியர் கொலை?
Byமாலை மலர்22 Jun 2017 11:32 AM GMT (Updated: 22 Jun 2017 11:32 AM GMT)
வாலாஜா ஏரியில் மிதந்து கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வாலாஜாவை அடுத்த அம்மணந்தாங்கல் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி பின்புறம் ஏரி உள்ளது. நேற்று மாலை இந்த ஏரி பகுதியில் சிலர் நடந்து சென்றனர். அப்போது அவர்கள் ஏரிக்குள் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து அவர்கள் வாலாஜா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்போரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏரியில் மிதந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் மகேஷ் (வயது44) சோளிங்கர் புலிவலம் தனியார் தொழிற்சாலையை சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தவர் என்பது தெரிய வந்தது.
மகேஷ் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்று மகளுக்கு பள்ளியில் பணம் கட்டி விட்டு வந்துள்ளார். அங்கிருந்து வேலூரில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் வாலாஜா வந்த அவர் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தலையில் காயம் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜாவை அடுத்த அம்மணந்தாங்கல் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி பின்புறம் ஏரி உள்ளது. நேற்று மாலை இந்த ஏரி பகுதியில் சிலர் நடந்து சென்றனர். அப்போது அவர்கள் ஏரிக்குள் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இது குறித்து அவர்கள் வாலாஜா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்போரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏரியில் மிதந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் மகேஷ் (வயது44) சோளிங்கர் புலிவலம் தனியார் தொழிற்சாலையை சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தவர் என்பது தெரிய வந்தது.
மகேஷ் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெங்களூர் சென்று மகளுக்கு பள்ளியில் பணம் கட்டி விட்டு வந்துள்ளார். அங்கிருந்து வேலூரில் உள்ள அக்கா வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் வாலாஜா வந்த அவர் ஏரியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தலையில் காயம் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X