என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடும்ப தகராறில் மகள்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
Byமாலை மலர்22 Jun 2017 6:31 AM GMT (Updated: 22 Jun 2017 6:31 AM GMT)
அறந்தாங்கி அருகே குடும்ப தகராறில் 2 மகள்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இளைய மகள் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்து லட்சுமி (வயது 32). இவருக்கும் ஆலங்குடியை அடுத்த பாத்தம்பட்டியை சேர்ந்த கணேசன் (35) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு கவிதா (5), நாடியம்மாள் (2) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே கடந்த பல மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு முத்து லட்சுமி கணவருடன் கோபித்துக்கொண்டு பரவாக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
இதையடுத்து கணேசனின் உறவினர்கள் முத்துலட்சுமியுடன் சமரசம் பேசி மீண்டும் குடும்பம் நடத்த பாத்தம்பட்டிக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே நேற்று முன் தினம் மீண்டும் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த முத்து லட்சுமி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார்.
நேற்று மாலை குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய முத்துலட்சுமி பாத்தம்பட்டியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்று பகுதிக்கு சென்றார். அங்கு தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசியதோடு தானும் குதித்தார்.
இதைப்பார்த்த அப்பகுதியினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே முத்து லட்சுமியும், மூத்த மகள் கவிதாவும் பரிதாபமாக இறந்தனர்.
இளைய மகள் நாடியம்மாள் உயிருக்கு போராடினார். தற்போது அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்து லட்சுமி (வயது 32). இவருக்கும் ஆலங்குடியை அடுத்த பாத்தம்பட்டியை சேர்ந்த கணேசன் (35) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு கவிதா (5), நாடியம்மாள் (2) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே கடந்த பல மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு முத்து லட்சுமி கணவருடன் கோபித்துக்கொண்டு பரவாக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
இதையடுத்து கணேசனின் உறவினர்கள் முத்துலட்சுமியுடன் சமரசம் பேசி மீண்டும் குடும்பம் நடத்த பாத்தம்பட்டிக்கு அழைத்து வந்தனர். இதற்கிடையே நேற்று முன் தினம் மீண்டும் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த முத்து லட்சுமி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார்.
நேற்று மாலை குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய முத்துலட்சுமி பாத்தம்பட்டியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்று பகுதிக்கு சென்றார். அங்கு தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசியதோடு தானும் குதித்தார்.
இதைப்பார்த்த அப்பகுதியினர் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே முத்து லட்சுமியும், மூத்த மகள் கவிதாவும் பரிதாபமாக இறந்தனர்.
இளைய மகள் நாடியம்மாள் உயிருக்கு போராடினார். தற்போது அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X