என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு: பன்னீர் செல்வம் அறிவிப்பு
Byமாலை மலர்22 Jun 2017 5:25 AM GMT (Updated: 22 Jun 2017 5:35 AM GMT)
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்கப் போவதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை:
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. அறிவித்துள்ள வேட்பாளருக்கு அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஒருமனதாக ஆதரவு அளிக்கப் போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சமி நேற்று அறிவித்தார்.
இந்நிலையில்,ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துடன், எம்.பிக்கள் மைத்ரேயன், லட்சுமணன், எம்எல்ஏக்கள் செம்மலை, ஆறுகுட்டி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்கு பிறகு ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பார் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X