search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எட். பட்டபடிப்பு படிக்க விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது
    X

    பி.எட். பட்டபடிப்பு படிக்க விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் 1,177 இடங்கள் உள்ளன. பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகள். பி.எட். படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் 1,177 இடங்கள் உள்ளன. பி.எட். படிப்பு காலம் 2 ஆண்டுகள். பி.எட். படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

    சென்னையில் காமராஜர் சாலையில் உள்ள வெலிங்டன் கல்வியல் மேம்பாட்டு நிறுவன (பி.எட். கல்லூரி) முதல்வர் கலைச்செல்வன் விண்ணப்பம் வழங்கும் பணியை தொடங்கிவைத்தார்.

    நேற்று பல மாணவ-மாணவிகள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அங்கேயே கொடுத்தனர். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை சமர்பிக்க ஜூலை 3-ந்தேதி கடைசி நாள். கலந்தாய்வு அடுத்த மாதம் 2-வது வாரத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் சென்னை பல்கலைக்கழக பட்டப்படிப்பு தேர்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை என்று விண்ணப்பம் பெற வந்த சிலர் கூறினார்கள்.
    Next Story
    ×