என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோட்டூர் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி முற்றுகை போராட்டம்
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள வாட்டார் கடைவீதியில் அரசு மதுக்கடை உள்ளது. இந்த கடையினால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே இந்த மதுக்கடையினை உடனடியாக மூட வலியுறுத்தி தெற்கு வாட்டார், செல்லத்தூர், வழச்சேரி, புத்தூர், திருவாசல் ஆகிய கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த மாதம் மதுக்கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த முத்துப்பேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் மதுக்கடையினை திறப்பதற்கு டாஸ்மாக் ஊழியர்கள் முயற்சித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மதுக்கடையினை முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் துணை செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் ஊராட்சி தலைவர் முருகேசன், தி.மு.க. நிர்வாகி தங்கராசு, அ.தி.மு.க. நிர்வாகி குஞ்சுப்பிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெருகவாழ்ந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மண்டல துணை மேலாளர் ராஜகோபால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்