search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் அதிகாரி பணியில் சேர வாய்ப்பு
    X

    முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் அதிகாரி பணியில் சேர வாய்ப்பு

    இந்திய ராணுவ முப்படையில் காலியாக உள்ள அதிகாரி பணிகளுக்கு திண்டுக்கல்லை சார்ந்த முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    திண்டுக்கல்:

    இந்திய ராணுவத்திற்கு முப்படைகளில் உள்ள அதிகாரி பணிகளுக்கு 390 இடங்கள் காலியாக உள்ளன என அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.

    எனவே, திண்டுக்கல் மாவட்டத்தினைச் சார்ந்த முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இயற்பியல் மற்றும் கணித பாடங்களை விருப்ப பாடங்களாக கொண்டிருத்தல் வேண்டும்.

    இந்த பணிகளுக்கு விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் விண்ணப்பிக்கலாம்.

    ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் 30.06.2017. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு சிறப்பு பயிற்சியினை வழங்கிட அரசு முடிவு செய்துள்ளதால் தங்களது விபரங்களை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் 27.06.2017-க்குள் நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் வினய் தெரிவித்து உள்ளார்.
    Next Story
    ×