என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாட்டிறைச்சி தடை விவகாரம்: முதல்வர் பழனிசாமி கருத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்
Byமாலை மலர்21 Jun 2017 10:30 AM GMT (Updated: 21 Jun 2017 10:30 AM GMT)
மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதிலுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கு எதிரான தடை அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் மாட்டிறைச்சி மீதான தடைக்கு எதிராக தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு வந்த பின்பே தமிழக அரசு முடிவுகளை எடுக்கும் என தெரிவித்துள்ளார். இது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் கூட்டணியில் உள்ள தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய மூன்று தோழமை கட்சி எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கு எதிரான தடை அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
தமிழக சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் மாட்டிறைச்சி மீதான தடைக்கு எதிராக தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு வந்த பின்பே தமிழக அரசு முடிவுகளை எடுக்கும் என தெரிவித்துள்ளார். இது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் கூட்டணியில் உள்ள தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகிய மூன்று தோழமை கட்சி எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X