என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
Byமாலை மலர்21 Jun 2017 9:25 AM GMT (Updated: 21 Jun 2017 9:25 AM GMT)
கும்பகோணத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து நேற்று 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் காலி குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் 2-வது வார்டில் மேலக்காவேரி யானையடி, மூப்பக்கோவில், பாபுசெட்டிக்குளம் பகுதிகள் உள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வார்டில் கடந்த 5 மாதங்களாக குடிநீர் குழாயில் தண்ணீர் சரிவர வரவில்லை.
இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து நேற்று 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து லாரியில் கொண்டு வந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X