search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணத்தில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
    X

    கும்பகோணத்தில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    கும்பகோணத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து நேற்று 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் காலி குடங்களுடன் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம் 2-வது வார்டில் மேலக்காவேரி யானையடி, மூப்பக்கோவில், பாபுசெட்டிக்குளம் பகுதிகள் உள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வார்டில் கடந்த 5 மாதங்களாக குடிநீர் குழாயில் தண்ணீர் சரிவர வரவில்லை.

    இதுகுறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து நேற்று 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து லாரியில் கொண்டு வந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.

    Next Story
    ×