என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்குன்றம் அருகே பிரபல ரவுடி கைது
Byமாலை மலர்21 Jun 2017 7:27 AM GMT (Updated: 21 Jun 2017 7:27 AM GMT)
செங்குன்றம் அருகே பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளும், 2 பட்டா கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரைச் சேர்ந்தவர் சிவா. அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று இரவு செங்குன்றத்தை அடுத்த ஆத்தந்தாங்கல் அருகே சோழவரம் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது மேம்பாலம் அருகே 2 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். போலீசாரின் வாகனத்தை பார்த்ததும் தப்பி ஓடினர்.
போலீசார் மின்னல் வேகத்தில் துரிதமாக விரட்டிச் சென்று அவர்களில் ஒருவரைப் பிடித்தனர். ஒருவர் தப்பிச் சென்று விட்டார்.
பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பிரபல ரவுடி பிசிறு சிவா என்பதும் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளும், 2 பட்டா கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X