search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரசில் லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும்: நாராயணசாமி பேச்சு
    X

    காங்கிரசில் லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும்: நாராயணசாமி பேச்சு

    காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

    புதுச்சேரி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமையை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது. அதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களிலும் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக புதுவை காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்த கூட்டம் நடந்தது. மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

    மேலிட பொறுப்பாளர் ஜக்மோகன் சிங் உறுப்பினர் சேர்க்கையின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார்.

    இதில் பங்கேற்ற முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். வரும் 19-ந் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டும். பின்னர் வட்டார, மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். இப்பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும்.

    அப்போது தான் அகில இந்திய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணி நிறைவுபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில்அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×