என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடுகள் தயார்
Byமாலை மலர்14 Jun 2017 9:48 AM GMT (Updated: 14 Jun 2017 9:49 AM GMT)
புதுச்சேரி மாநிலத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24-ந் தேதியோடு முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது.
நாடு முழுவதும் இருந்து 545 எம்.பிக்கள், 4012 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர். யூனியன் பிரதேசமான புதுவையில் மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
புதுவை சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் ஜனாதிபதி தேர்தலுக்கான உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்வதற்கான தேர்தல் அலுவலர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பாக அறிவிப்பு இன்று சட்டப்பேரவை வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் 15, என்.ஆர். காங்கிரஸ் 8, அ.தி.மு.க. 4, தி.மு.க. 2, சுயே 1 உள்பட 30 எம்.எல்.ஏக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24-ந் தேதியோடு முடிவடைகிறது. அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெறுகிறது.
நாடு முழுவதும் இருந்து 545 எம்.பிக்கள், 4012 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்கின்றனர். யூனியன் பிரதேசமான புதுவையில் மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
புதுவை சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் ஜனாதிபதி தேர்தலுக்கான உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் நடைமுறைகளை மேற்கொள்வதற்கான தேர்தல் அலுவலர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகள் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பாக அறிவிப்பு இன்று சட்டப்பேரவை வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் 15, என்.ஆர். காங்கிரஸ் 8, அ.தி.மு.க. 4, தி.மு.க. 2, சுயே 1 உள்பட 30 எம்.எல்.ஏக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X