என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சட்டசபைக்கு துறை செயலர்கள் காலத்தோடு வர வேண்டும்: சபாநாயகர் அறிவுரை
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது தி.மு.க. உறுப்பினர் சிவா கேள்வி எழுப்பி பேசினார். அப்போது உறுப்பினர் அனந்தராமன் குறுக்கிட்டு பேசியதாவது:-
சட்டசபை கேள்விநேரம் நடக்கும்போது துறையின் செயலர்கள் வளாகத்திற்குள் இருக்க வேண்டும். இயக்குனர்கள் இருக்க வேண்டும். சபை உறுப்பினர்களின் கேள்விக்கு அவர்கள்தான் அமைச்சர்களுக்கு உடனடியாக பதில் தர வேண்டும்.
ஆனால் இங்கு யாரும் நேரத்திற்கு வருவதில்லை. கவர்னர் அழைத்தால் மட்டும் காலை 6 மணிக்கு செல்கின்றனர். இதனால் சபாநாயகர் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
இதே கருத்தை வலியுறுத்தி பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திட்டமிட்டு சபையின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர் என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நமச்சிவாயம், துறை தலைவர்கள் வந்துள்ளனர், செயலர்களும் வந்து விடுவார்கள் என்றார்.
அப்போது சபாநாயகர் வைத்திலிங்கம், அதிகாரிகள் அனைவரும் சபை நடக்கும்போது சரியான நேரத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்