என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செந்துறை வாழை வணிக வளாகத்தில் 186 வாழைத்தார்கள் ஏலம்
Byமாலை மலர்8 Jun 2017 4:04 PM GMT (Updated: 8 Jun 2017 4:04 PM GMT)
திருச்செந்துறை கிராமத்தில் அமைந்துள்ள வாழை வணிக வளாகத்தில் வாழைத்தார் பொதுஏலம் நடைபெற்றது. மொத்தம் 186 வாழைத்தார்கள் ஏலத்திற்கு வந்தன.
திருச்சி:
திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ், திருச்செந்துறை கிராமத்தில் அமைந்துள்ள வாழை வணிக வளாகத்தில் வாழைத்தார் பொதுஏலம் நடைபெற்றது. மொத்தம் 186 வாழைத்தார்கள் ஏலத்திற்கு வந்தன. கிளியநல்லூர், குழுமணி, பெரியகருப்பூர் ஆகிய கிராமங்களிலிருந்து 4 விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். ரூ.10,225 மதிப்பிற்கு ஏலம் நடைபெற்றது.
பூவன்தார் அதிகபட்சமாக ரூ.80 -க்கும், பச்சலா டன் தார் அதிகபட்சமாக ரூ.75-க்கும், கற்பூரவள்ளிதார் அதிக பட்சமாக ரூ.70-க்கும், மொந்தன்தார் அதிக பட்சமாக ரூ.50-க்கும், ஏலம் போனது. நல்ல தரமான வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.
விவசாயிகளிடமிருந்து எவ்வித கட்டணமோ, கமிஷனோ வசூலிக்கப்படுவதில்லை. விவசாயிகளுக்கு உரிய பணம் அன்றே பட்டுவாடா செய்யப்பட்டது. வாழை விவசாயிகள் அனைவரும் இந்த விற்பனை வாய்ப்பினை பயன்படுத்தி அதிக வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஜீயபுரம், குழுமணி, கோப்பு ஆகிய ஊர் களிலிருந்து மொத்தம் 4 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அடுத்த ஏலம் 13.6.2017 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும். இந்த பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாழைத்தார்களை ஏலம் எடுக்க வியாபாரிகளுக்கும் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ், திருச்செந்துறை கிராமத்தில் அமைந்துள்ள வாழை வணிக வளாகத்தில் வாழைத்தார் பொதுஏலம் நடைபெற்றது. மொத்தம் 186 வாழைத்தார்கள் ஏலத்திற்கு வந்தன. கிளியநல்லூர், குழுமணி, பெரியகருப்பூர் ஆகிய கிராமங்களிலிருந்து 4 விவசாயிகள் தாங்கள் விளைவித்த வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். ரூ.10,225 மதிப்பிற்கு ஏலம் நடைபெற்றது.
பூவன்தார் அதிகபட்சமாக ரூ.80 -க்கும், பச்சலா டன் தார் அதிகபட்சமாக ரூ.75-க்கும், கற்பூரவள்ளிதார் அதிக பட்சமாக ரூ.70-க்கும், மொந்தன்தார் அதிக பட்சமாக ரூ.50-க்கும், ஏலம் போனது. நல்ல தரமான வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.
விவசாயிகளிடமிருந்து எவ்வித கட்டணமோ, கமிஷனோ வசூலிக்கப்படுவதில்லை. விவசாயிகளுக்கு உரிய பணம் அன்றே பட்டுவாடா செய்யப்பட்டது. வாழை விவசாயிகள் அனைவரும் இந்த விற்பனை வாய்ப்பினை பயன்படுத்தி அதிக வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஜீயபுரம், குழுமணி, கோப்பு ஆகிய ஊர் களிலிருந்து மொத்தம் 4 வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அடுத்த ஏலம் 13.6.2017 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும். இந்த பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாழைத்தார்களை ஏலம் எடுக்க வியாபாரிகளுக்கும் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X