search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் பீதி
    X

    ஆம்பூர் அருகே குட்டியுடன் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் பீதி

    ஆம்பூர் அருகே வனப்பகுதி ஒட்டிய கிராம பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிந்து இருந்ததை கண்டு அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த உமராபாத் பாலூர் மலை அடிவார பகுதியில் கடந்த 2 நாட்களாக பறவைகள் மற்றும் கால் நடைகள் வித்தியாசாமாக சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது. இதைகேட்ட கிராம மக்கள் ஏதாவது வன விலங்கு ஊருக்குள் வருவதற்கான அறிகுறியாக இருக்கும் என அச்சத்தில் இருந்தனர். அதனால், மாலை நேரம் தொடங்கிய உடனே அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர்.

    இந்நிலையில், பாலூர் மலை அடிவாரம், கன்னியம்மன் கோவில் அருகே இன்று காலை சிறுத்தையின் கால் தடம் பதிந்து இருந்ததை பார்த்த அப்பகுதிமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுத்தை குட்டியின் கால் தடமும் உள்ளது.

    இதுகுறித்து, ஆம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அது சிறுத்தையின் கால் தடமா? என்று ஆய்வு செய்தனர். சிறுத்தையின் கால் தடம் கண்டு பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.

    சிறுத்தை நடமாட்டம் இருந்தால் அதை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் அப்பகுதி மக்களிடம் கூறினர்.
    Next Story
    ×