என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றதை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்8 Jun 2017 10:12 AM GMT (Updated: 8 Jun 2017 10:12 AM GMT)
சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றதை கண்டித்து புதுவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
புதுச்சேரி:
டெல்லியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரியை 2 பேர் தாக்க முயன்றனர்.
இதனை கண்டித்து புதுவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று சாரம் அவ்வை திடலில் ஜீவானந்தம் சிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். புதுவை நகர செயலாளர் மதிவாணன், உழவர்கரை நகர செயலாளர் ராமராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்டு உறுப்பினர்கள் பெருமாள், முருகன், ராமச்சந்திரன், வின்சென்ட், உலகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X