search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    திருப்பூர் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

    தாயிடம் மது குடிக்க பணம் கேட்டு கொடுக்காததால் வேதனை அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் சஞ்சய்குமார் (வயது 28). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சஞ்சய் குமார் வீட்டில் பெற்றோரிடம் மது குடிக்க பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பல முறை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

    இதனால் சஞ்சய்குமார் மனமுடைந்து 3 முறை தற்கொலைக்கு முயன்றார் அவரது பெற்றோர் ஒவ்வொரு முறையும் காப்பாற்றினர். இந்த நிலையில் நேற்று மதியம் சஞ்சய்குமார், தனது தாயிடம் சென்று மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் மறுத்து கண்டித்ததாக தெரிகிறது. இதனால் வேதனை அடைந்த சஞ்சய்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இதுபற்றி திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சஞ்சய் குமார் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×